சித்ரா பௌர்ணமி 2022 : முக்கியத்துவம் மற்றும் வழிபாட்டு முறை
சித்ரா பௌர்ணமி என்பது சித்ரகுப்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து பண்டிகையாகும், அவர் தெய்வீக கணக்காளர் மற்றும் மரணத்தின் கடவுளான யமனின் உதவியாளர் இந்து புராணங்களின்படி, எல்லா நபர்களின் வாழ்க்கையிலும் நல்ல மற்றும் கெட்ட செயல்களைக் கண்காணிப்பதற்கு அவர் பொறுப்பு. சித்ரா பௌர்ணமி ‘சித்திரை பூர்ணிமா’ என்றும் பிரசித்தம். இது முதன்மையாக 'சித்திரை' மாதத்தில் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படும் ஒரு தமிழ் பண்டிகையாகும். ஆங்கில நாட்காட்டியில், இது ஏப்ரல்-மே மாதங்களில் குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் பௌர்ணமியும் சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இந்த நாள் மங்களகரமானதாக அறியப்படுகிறது.

எதிர்காலம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனைக்கும் கற்றறிந்த ஜோதிடர்களிடம் பேசி தீர்வு காணலாம்.
சித்ரா பௌர்ணமி 2022: தேதி மற்றும் சுப முஹூர்த்தம்
16 ஏப்ரல், 2022 (சனிக்கிழமை)
பௌர்ணமி 16 ஏப்ரல், 2022 அன்று 02:27:35 முதல் தொடங்குகிறது
பௌர்ணமி 17 ஏப்ரல், 2022 அன்று 00:26:51 மணிக்கு முடிவடைகிறது
தகவல்: மேலே கொடுக்கப்பட்ட முஹூர்த்தம் டெல்லிக்கு செல்லுபடியாகும். உங்கள் ஊரின் படி இந்த நாளின் சுப நேரத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், இங்கே கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சித்ரா பௌர்ணமி கதை
இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் சித்ரா பௌர்ணமி தினத்தில் அவதரித்தார்.
அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார்.
அதே நேரத்தில் சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பௌர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.
இந்த நாள் எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.
பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
சித்ரா பௌர்ணமி வழிபாடும் சடங்குகள்
- சித்ரா பௌர்ணமி நாளில், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இவற்றில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவில், திருவக்கரையில் உள்ள சந்திர மௌலீஸ்வர் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில் போன்ற விழாக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
- பக்தர்கள் இந்த நாளில் சித்ரகுப்தரை முழு ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் வழிபடுகிறார்கள். பிரார்த்தனைகளை மனப்பூர்வமாகச் செய்தால், அவர் / அவள் செய்த அனைத்து பாவங்களும் கரைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, எல்லாம் வல்ல இறைவன் அவனுக்கு/அவளுக்கு உண்மையாக வாழ்வதற்கான தைரியத்தையும் வழங்குவார். பக்தர்கள் செய்த பாவங்களை போக்குவதற்காக நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம்.
- பக்தர்கள் சித்ரகுப்தர் கோயில்களுக்குச் சென்று தங்கள் தெய்வத்தை மலர்கள், கற்பூரம் மற்றும் தூபக் குச்சிகளால் வணங்குகிறார்கள். இந்த நாளில் சக்கரைப் பொங்கல் போன்ற சிறப்பு உணவுகள் பிரசாதமாகத் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த நாளில் அனைத்து சுவையான உணவுகளும் உப்பு பயன்படுத்தாமல் தயாரிக்கப்படுகின்றன. சித்ரா பௌர்ணமி நாளில், பக்தர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கிறார்கள்.
- இந்த நாளில் இந்திரன் மற்றும் குருவின் கதையைப் படித்து தியானிப்பது நன்மை பயக்கும்.
- பக்தர்கள் தங்கள் கடந்த காலத்தில் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கும் இந்த நாளில், சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஏழை அல்லது இயலாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இந்த நாளில் ஆடைகள், அரிசி மற்றும் காய்கறிகள் தாராளமாக வழங்கப்படுகின்றன.
சித்ரா பௌர்ணமியின் முக்கியத்துவம்
சித்ரா பௌர்ணமி தினம் பல வழிகளில் போற்றப்படுவதாக நம்பப்படுகிறது. ‘சித்திரை’ மாதத்தில் வரும் இந்த பௌர்ணமி வேத வருடத்தின் முதல் பௌர்ணமி நாளாகும். உடல்நலம், செல்வம் மற்றும் உறவுகளை மறுக்கும் கர்மாவை நீக்குவதில் இந்த நாள் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘கெட்ட’ கர்மாவை போக்கவும், ‘நல்ல’ கர்மாவை ஒருங்கிணைக்கவும் மக்கள் சித்ரகுப்தரை அன்று வழிபடுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல கர்மாவை பராமரிக்க அவருடைய தெய்வீக ஆசீர்வாதத்தையும் நாடுகிறார்கள். இந்த நாளில் ஒருவர் தனது வாழ்நாளில் செய்த பாவங்களை சமன் செய்வதற்காக தொண்டு அல்லது தானம் போன்ற நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்யவும்: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்
எங்களின் இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அத்தகைய சூழ்நிலையில், இந்த கட்டுரையை உங்கள் மற்ற நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நன்றி!
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems

AstroSage on MobileAll Mobile Apps
- Sun Transit In Leo Blesses Some Zodiacs; Yours Made It To The List?
- Venus Nakshatra Transit Aug 2025: 3 Zodiacs Destined For Luck & Prosperity!
- Janmashtami 2025: Read & Check Out Date, Auspicious Yoga & More!
- Sun Transit Aug 2025: Golden Luck For Natives Of 3 Lucky Zodiac Signs!
- From Moon to Mars Mahadasha: India’s Astrological Shift in 2025
- Vish Yoga Explained: When Trail Of Free Thinking Is Held Captive!
- Kajari Teej 2025: Check Out The Remedies, Puja Vidhi, & More!
- Weekly Horoscope From 11 August To 17 August, 2025
- Mercury Direct In Cancer: These Zodiac Signs Have To Be Careful
- Bhadrapada Month 2025: Fasts & Festivals, Tailored Remedies & More!
- सूर्य का सिंह राशि में गोचर, इन राशि वालों की होगी चांदी ही चांदी!
- जन्माष्टमी 2025 पर बना दुर्लभ संयोग, इन राशियों पर बरसेगी श्रीकृष्ण की विशेष कृपा!
- अगस्त में इस दिन बन रहा है विष योग, ये राशि वाले रहें सावधान!
- कजरी तीज 2025 पर करें ये विशेष उपाय, मिलेगा अखंड सौभाग्य का वरदान
- अगस्त के इस सप्ताह मचेगी श्रीकृष्ण जन्माष्टमी की धूम, देखें व्रत-त्योहारों की संपूर्ण जानकारी!
- बुध कर्क राशि में मार्गी: इन राशियों को रहना होगा सावधान, तुरंत कर लें ये उपाय
- भाद्रपद माह 2025: त्योहारों के बीच खुलेंगे भाग्य के द्वार, जानें किस राशि के जातक का चमकेगा भाग्य!
- अंक ज्योतिष साप्ताहिक राशिफल: 10 से 16 अगस्त, 2025
- टैरो साप्ताहिक राशिफल (10 अगस्त से 16 अगस्त, 2025): इस सप्ताह इन राशि वालों की चमकेगी किस्मत!
- कब है रक्षाबंधन 2025? क्या पड़ेगा भद्रा का साया? जानिए राखी बांधने का सही समय
- Horoscope 2025
- Rashifal 2025
- Calendar 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025